என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள்: நினைவிடத்தில் ஜனாதிபதி, மன்மோகன் சிங், ராகுல் அஞ்சலி
Byமாலை மலர்20 Aug 2016 5:11 AM GMT (Updated: 20 Aug 2016 5:11 AM GMT)
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி, மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
21-8-1944 அன்று பிறந்த ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் இன்று எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னாள் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அவரது நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி, மே 21-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
21-8-1944 அன்று பிறந்த ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் இன்று எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னாள் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அவரது நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X