search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திடீரென வெடித்த குழாய் - மின்னல் வேகத்தில் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திடீரென வெடித்த குழாய் - மின்னல் வேகத்தில் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலி

    • குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது.
    • இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்தது.

    இந்நிலையில், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான அந்த பைப் லைனில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அசுர வேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    தண்ணீர் பாய்ந்த வேகத்தில் சிக்கிய 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். தண்ணீரின் வேகத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீணாக கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தினர்.

    குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பால் பாய்ந்த தண்ணீரில் சிக்கி 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×