என் மலர்
இந்தியா

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி தற்கொலை? போலீஸ் விசாரணை
- முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது.
- சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் இன்று அதிகாலையில் 19 வயது இந்திய கடற்படை மாலுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது.
சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ விசாரணைக் குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Next Story






