search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    குழந்தைகள் ஹெல்ப்லைன் உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுகிறதா? பிஐபி விளக்கம்
    X

    குழந்தைகள் ஹெல்ப்லைன் உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுகிறதா? பிஐபி விளக்கம்

    • குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்று செய்தி பரவியது
    • ஹெல்ப்லைன் 1098ஐ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து இயக்கும்.


    குழந்தைகள் உதவி எண் 1098 மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்றும் நாளிதழில் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என பத்திரிகை தகவல் மையத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் உதவி எண் 1098 இருக்காது என்றும், குழந்தைகள் தொடர்பான உதவிக்கு 112 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்க வேண்டும் என்றும் செப்டம்டபர் 14ம் தேதி செய்தி வெளியிடப்பட்டதை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. இந்த செய்தியின் தலைப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்கள், பொது மக்களை தவறாக வழிநடத்தும் மற்றும் குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் உண்மை நிலையை சரிபார்க்காமல் எழுதப்பட்டுள்ளது.

    குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098 உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்படுவதாகவும், அது ERSS ஹெல்ப்லைன் எண் 112ன் கீழ் செயல்படும் என்று வெளியிடப்பட்ட அந்த செய்தி முற்றிலும் தவறானது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை. சிறார் நீதிச் சட்டம் 2015 இன் விதிமுறைகளுக்கு இணங்க, ஹெல்ப்லைன் 1098ஐ அமைச்சகம் தொடர்ந்து இயக்கும். 1098-க்கான அழைப்புகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு வரும். மேலும் குழந்தைக்குத் தேவையான உதவிகள் தற்போது வழங்கப்படுவது போன்றே வழங்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை போன்ற கூடுதல் அவசர உதவி தேவைப்பட்டால், உள்ளூர் காவல்துறையும் உஷார்படுத்தப்படும்.

    இவ்வாறு பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது

    Next Story
    ×