என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டதாக வைரலாகும் தகவல்
Byமாலை மலர்31 Dec 2021 5:17 AM GMT (Updated: 31 Dec 2021 5:17 AM GMT)
டெல்லி பல்கலைக்கழகம் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறந்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிசம்பர் 28 ஆம் தேதி அடங்கிய அறிக்கையில், டெல்லி பல்கலைக்கழகம் ஜனவரி 10 முதல் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரிகளை திறந்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிடுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் டெல்லி பல்கலைக்கழகம் இதுபோன்று எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இதே தகவலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அமைப்பும் பொய் என தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவல் பி.ஐ.பி. டுவிட்டர் பக்கத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
வைரல் அறிக்கையை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழகம் கல்லூரிகளை திறப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X