search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாருக் கான்
    X
    ஷாருக் கான்

    சமீபத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் ஷாருக் கான் புகைப்படம்

    பிரபல நடிகர் ஷாருக் கானின் புகைப்படம் சமீபத்திய போதை பொருள் விகாரத்துடன் ஒப்பிட்டு வைரலாகி வருகிறது.


    ஷாருக் கானின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் ஷாருக் கான் முகம் முழுக்க கவலையுடன் காணப்படுகிறார். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது, பின் மும்பையில் உள்ள ஷாருக் கானின் வீட்டை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தது உள்ளிட்ட சம்பவங்களால் ஷாருக் கான் இப்படி காணப்படுகிறார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2017 ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படம் ஷாருக் கான் அலியா பட் பிறந்த நாள் நிகழ்வுக்கு வந்த போது எடுக்கப்பட்டது ஆகும். இதே புகைப்படம் அடங்கிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

     வைரல் புகைப்படம்

    ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைதானதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அக்டோபர் 22 ஆம் தேதி மும்பையில் உள்ள ஷாருக் கான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 'மன்னட் வீட்டில் சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து ஷாருக் கானின் முகம்,' எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய போதை பொருள் விகராத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×