என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாக வைரலாகும் அகிலேஷ் யாதவ் புகைப்படம்
Byமாலை மலர்20 Oct 2021 5:29 AM GMT (Updated: 20 Oct 2021 5:35 AM GMT)
நவராத்திரி பண்டிகையின் போது அகிலேஷ் யாதவ் இந்து மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்துக்களின் மத நம்பிக்கையை அவமதித்ததாக கூறி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நவராத்திரியின் போது காலணி அணிந்த நிலையில், பெண்களுக்கு உணவு வழங்கியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அகிலேஷ் யாதவ் கருப்பு நிற காலணி அணிந்து கொண்டு உணவு வழங்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இவருடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது அது ஜூலை 2015 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
உண்மையில், இந்த புகைப்படம் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது ஔசாலா போஷன் திட்டத்தை துவக்கி வைத்த போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படம் நவராத்திரியின் போது எடுக்கப்படவில்லை. அந்த வகையில் வைரல் புகைப்படம் நவராத்திரி சமயத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X