search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாக வைரலாகும் அகிலேஷ் யாதவ் புகைப்படம்

    நவராத்திரி பண்டிகையின் போது அகிலேஷ் யாதவ் இந்து மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இந்துக்களின் மத நம்பிக்கையை அவமதித்ததாக கூறி புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நவராத்திரியின் போது காலணி அணிந்த நிலையில், பெண்களுக்கு உணவு வழங்கியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் அகிலேஷ் யாதவ் கருப்பு நிற காலணி அணிந்து கொண்டு உணவு வழங்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. புகைப்படத்தில் இவருடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர். வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடியபோது அது ஜூலை 2015 வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.

     வைரல் புகைப்படம்

    உண்மையில், இந்த புகைப்படம் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது ஔசாலா போஷன் திட்டத்தை துவக்கி வைத்த போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படம் நவராத்திரியின் போது எடுக்கப்படவில்லை. அந்த வகையில் வைரல் புகைப்படம் நவராத்திரி சமயத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
    Next Story
    ×