என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பகீர் தகவலுடன் வைரலாகும் ஆர்.எஸ்.எஸ். புகைப்படம்
Byமாலை மலர்21 Sep 2021 5:21 AM GMT (Updated: 21 Sep 2021 5:21 AM GMT)
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டது என கூறி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மற்றும் ராணி எலிசபெத் ஒரே பிரேமில் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ராணிக்கு வணக்கம் செலுத்துவதில் ஆர்வமாக இருந்தனர் எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது இரண்டு புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இரண்டில் ஒரு புகைப்படம் 1952, பிப்ரவரி மாதத்தில் எலிசபெத் ராணியாக பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
மற்றொரு புகைப்படம் 2013 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட வலைதள செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் 2008 ஆம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில், வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று புகைப்படம் சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலக்கட்டத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாவிகிவிட்டது. மேலும் புகைப்படம் கணினியில் உருவாக்கப்பட்டது என்றும் தெளிவாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X