என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள்
Byமாலை மலர்4 Aug 2021 5:14 AM GMT (Updated: 4 Aug 2021 5:14 AM GMT)
வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கும் புகைப்படங்கள் ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் பகிரப்படுகின்றன.
மரங்கள் அதிகம் உள்ள தெரு மற்றும் மரங்களே இல்லாத தெரு என இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை குறைவாகவும், மரங்களே இல்லாத தெருவில் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது போன்ற தகவலுடன் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
மரங்கள் இல்லாத தெருவின் வெப்பநிலை 36°C முதல் 50°C ஆகவும், மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை 18°C முதல் 26°C ஆகவும் இருக்கிறது என கூறி பலர் இந்த புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முதல் புகைப்படம் அமெரிக்காவின் இடாஹோவில் எடுக்கப்பட்டது என்றும் மற்றொரு புகைப்படம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் பதியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X