search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படங்கள்

    வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கும் புகைப்படங்கள் ஒரே நகரில் எடுக்கப்பட்டதாக கூறி இணையத்தில் பகிரப்படுகின்றன.


    மரங்கள் அதிகம் உள்ள தெரு மற்றும் மரங்களே இல்லாத தெரு என இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை குறைவாகவும், மரங்களே இல்லாத தெருவில் வெப்பநிலை அதிகமாகவும் உள்ளது போன்ற தகவலுடன் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

    மரங்கள் இல்லாத தெருவின் வெப்பநிலை 36°C முதல் 50°C ஆகவும், மரங்கள் அதிகம் உள்ள தெருவின் வெப்பநிலை 18°C முதல் 26°C ஆகவும் இருக்கிறது என கூறி பலர் இந்த புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், முதல் புகைப்படம் அமெரிக்காவின் இடாஹோவில் எடுக்கப்பட்டது என்றும் மற்றொரு புகைப்படம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் பதியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இரு புகைப்படங்களும் ஒரே நகரில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×