search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தன் சாவடியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
    X

    கந்தன் சாவடியில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

    கந்தன் சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடி பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

    காவிரி பிரச்சனைக்காக. பாராளுமன்றத்தை முடக்கியவர்கள் அ.தி.மு.க. எம்.பிக்கள். தி.மு.க. எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.மு.க.வின் தலைவர் ஆனவர். ஆனால் நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில், பாராளுமன்றத்தில் போதிய நிதி இருந்தும் மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. அதிகாரம் தான் அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது தவிர, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை.

    ஆனால் அதிமுக அரசு கிடைத்த உரிமையை முறையாக பயன் படுத்தியது. நாட்டில் உள்ள மக்களை பாதுகாக்க மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி எம்.எல்.ஏ., சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மற்றும் ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதிராஜாராம், கமலகண்ணன், பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீராமஜெயம், மூவேந்தர், பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், டால்பின் ஸ்ரீதர், மோகன்ராஜா, பா.ம.க. நிர்வாகிகள் சகாதேவன், விவேல், லோகநாதன், ராம்குமார், சிவகுமார், தே.மு.தி.க. வி.சி. ஆனந்தன், பிரபாகரன், தினகரன், முருகன்., த.மா.கா. மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மனோகர், சத்தியநாராயணன், புதிய நீதி கட்சி துரைராஜ், ரமேஷ், ஜெகன், புரட்சி பாரதம் கட்சி ராஜி, ஆதிவேந்தன், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    Next Story
    ×