search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் இன்று நடந்த வாகன சோதனையில் 1008 பித்தளை செம்புகள் பறிமுதல்
    X

    திருச்சியில் இன்று நடந்த வாகன சோதனையில் 1008 பித்தளை செம்புகள் பறிமுதல்

    திருச்சியில் இன்று நடந்த வாகன சோதனையில் 1008 பித்தளை செம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    திருச்சி:

    திருச்சி கரூர் சாலை குட முருட்டி பாலம் சோதனை சாவடி அருகில் இன்று காலை திருச்சி தேர்தல் பறக்கும் படை ஏ பிரிவு அதிகாரிகள் தனி வட்டாட்சியர் மோகனா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் 1008 பித்தளை செம்புகள், 500க்கும் மேற்பட்ட சங்குகள் இருந்தது. அவை எங்கு எடுத்து செல்லப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது காரில் வந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள கோவிலுக்கு பரிகார பூஜைகள் செய்வதற்காக செல்வதாகவும் கூறினர். மேலும் அந்த செம்புகள் மற்றும் சங்குகளை கோவையில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் பித்தளை செம்புகள், சங்குகள் எடுத்து செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் 1008 செம்புகள், சங்குகள் மற்றும் பூஜைக்காக எடுத்து வந்த பூக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருச்சி கிழக்கு தாசில்தார் சண்முக வேலனிடம் ஒப்படைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராணி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை சென்ற தனியார் பேருந்தை சோதனையிட்டதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சிவா(32) என்பவர் 100 எண்ணிக்கையிலான வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LSPolls

    Next Story
    ×