search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரோட்டாவுக்கு சால்னா வாங்கி கொடுக்காததால் வாலிபருக்கு கத்திக்குத்து- 5 பேர் கைது
    X

    புரோட்டாவுக்கு சால்னா வாங்கி கொடுக்காததால் வாலிபருக்கு கத்திக்குத்து- 5 பேர் கைது

    • மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது.
    • பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (26). போட்டோ கிராபர். இவர் தனது உறவினரை சந்திக்க டெம்பிள் சிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 5 பேர் கும்பல் விக்னேசை வழிமறித்தது. புரோட்டாவுக்கு சால்னா வாங்கி கொடுக்கும்படி தகராறில் ஈடுபட்டனர். இதற்கு அவர் மறுத்ததால் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்பிள்சிட்டி பகுதியை சேர்ந்த ஹரீஷ், கன்னியப்பன், சரவணன், எல்லப்பன், பெரியதனுஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×