என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் சாவு
- அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது.
- இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு. இவரது மனைவி மஞ்சு (வயது 45). இவர் நேற்று வீட்டின் முன்பு நடந்து சென்றார்.
அப்போது அங்கு இருந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காத மஞ்சு தவறி தொட்டிற்குள் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உறவினர்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மஞ்சுவின் மீட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






