search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
    X

    கலெக்டர் ரவிச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

    தென்காசி மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

    • கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உள்பட மொத்தம் 375 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    வீட்டுமனை பட்டா

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 375 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    நலத்திட்ட உதவிகள்

    தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடை பெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மின்களம் பொருத் தப்பட்ட 4 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறையின் மூலம் கருணை அடிப்படையில் 2 பேருக்கு அங்கன்வாடி பணியாளருக்கான பணி நியமன ஆணையினையும் கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, உதவி கமிஷனர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், ஒருகிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியப்பன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணி யன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×