search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
    X

    அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    • எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    தென்காசி:

    அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி தொழிலதிபரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றாக இணைந்து கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதசுவாமி கோவிலின் பூரண கும்பம் மரியாதை உடன் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    Next Story
    ×