search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனமடங்கி கோழிப்பண்ணை அதிபரை கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    பனமடங்கி கோழிப்பண்ணை அதிபரை கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பனமடங்கியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சுரேஷ் (வயது 28) கடந்த ஜனவரி மாதம் இரவு கோழித் தீவனம் வாங்க வேலூருக்குச் சென்றார்.

    கொணவட்டம் அருகே சென்றபோது, அவரை 5 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி, செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.

    அப்போது, அவரை கடத்தி ரூ.2 லட்சத்தை கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என உறவினர்களிடம் தெரிவிக்கும்படி கூறினர்.

    சுரேஷும் அவர்கள் கூறியபடி செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார் எடுத்துக்கொண்ட அவரது உறவினர்கள் ஏராளமானோர் கொண வட்டத்திற்கு வந்தனர்.

    விரைந்து வந்த அவர்கள் கொணவட்டத்தைச் சேர்ந்த பாஷா (37), ரியாஸ் (32), சித்திக் (36) ஆகிய 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஷா தொடர்ந்து வழிப்பறி மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பாஷா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×