search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பத்தில் பழுதான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு
    X

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சேதமடைந்த குழாய்கள் சீரமைக்கப்பட்ட காட்சி.

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பத்தில் பழுதான குடிநீர் குழாய்கள் சீரமைப்பு

    • நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது சிரமமாக இருந்து
    • ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி நாள் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால், கடந்த சில நாட்களாக மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் ஓடியது. மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது சிரமமாக இருந்து வந்தது.

    இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல்கள் இருந்து வந்தது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாய்களை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி முன்னி லையில் சேதமடைந்த குழாய்கள் துரிதமாக நேற்று சீரமைக்கப்பட்டன.

    இதனால் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்க்கு நன்றி தெறிவித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×