search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அடுத்த வீ.மத்தூர் கிராமத்தில் 108-ம் ஆண்டாக காளை விடும் விழா
    X

    குடியாத்தம் அடுத்த வீ.மத்தூர் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் சீறி பாய்ந்து ஓடிய காளை.

    குடியாத்தம் அடுத்த வீ.மத்தூர் கிராமத்தில் 108-ம் ஆண்டாக காளை விடும் விழா

    • 200 மாடுகள் பங்கேற்பு
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தில் 108-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.

    காளைகள் ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்ட ருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. இந்த காளை விடும் திருவிழாக்குழு தலைவர் சிவபிரசாத், செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார்.இந்தப் போட்டிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் தாசில்தார் எம். விஜயகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் குசிலகுமாரி சேகர் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா உமா காந்தன், துணைத் தலைவர் வேலு, ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காயமடைந்த வர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வி.மத்தூர் கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×