search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-பெங்களூரு சாலையில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    வேலூரில் சென்னை - பெங்களூரு 6 வழிச் சாலையில் இன்று காலை ஏற்பட்ட பனி மூட்டம்.

    சென்னை-பெங்களூரு சாலையில் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    • விழிப்புணர்வுடன் செல்ல அறிவுறுத்தல்
    • கடும் குளிரால் வேலூரில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த வாரத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது.தற்போது குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாகவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது.

    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை நேரத்தில் எதிரே இருப்பது கூட தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு கொட்டுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விடிந்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை, மாலை பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள முடங்கியுள்ளனர். வெயில் வந்த பிறகே, வீடுகளில் இருந்து வெளியில் வருகிறார்கள். கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து உறைய வைக்கிறது.

    பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வேலூர் மக்கள் வீதியிலும், வீட்டு முன்பும் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை கொளுத்திவிட்டு குளிர் காய்கிறார்கள். கொட்டும் பனிக்கும், உறைய வைக்கும் குளிருக்கும் ஸ்வெட்டர், சால்வை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    பனிப்பொழிவு, குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பனி கொட்டுவதால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பனிக்கு டீக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×