என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பலகாரங்கள் தரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்
    X

    தீபாவளி பலகாரங்கள் தரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
    • உணவு பொருள் தயாரிக்கும் வளாகத்தில் எலி, பூச்சிகள் நடமாட்டம் இருக்க கூடாது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை இனிப்பு காரம் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழ் பெறாமல் உணவு தயாரிப்பதோ, விற்பதோ உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 பிரிவு 31-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும்.

    எலி, பூச்சிகள் இருக்க கூடாது

    தயாரிப்பு பகுதி சமையலறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். தயாரிப்பு பகுதி இருட்டாகவும் சுவர்களில் கரி படிந்திருக்கக்கூடாது. தரைத்தளம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும், தரைத்தளம் உடைந்த நிலையில் பூச்சிகள். எலிகள், நடமாட்டம் இருக்கம் வகையில் இருக்க கூடாது.

    உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள், புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி சுட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும்.

    உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    உணவு தயாரிப்பின் போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெயை சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.

    நகைகள் அணிய கூடாது

    இனிப்பு/காரவகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவில் சேர்க்கலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்க கூடாது மேலும் அணுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவை மீறக்கூடாது.

    உணவு தயாரிப்பிற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    உணவு பொருள் தயாரிப்பு விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு உபயோகப்படுத்தும் தூய்மையாக கழுவி நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும். கலன்கள் உணவு சமைக்கும் கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் கைகளில் நகங்களுடன், முழுச்சீருடையற்ற வகையில் எளிதில் கழன்று விழக்கூடிய நகைகள் மோதிரங்களுடன் பணியாற்றக் கூடாது.

    புகை பிடிப்பவர்கள் அனுமதிக்க கூடாது

    பணியின்போது பணியாளர்கள் கையுறை தலையுறை மேலங்கி அணிந்திருக்க வேண்டும். வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், எச்சில் துப்பதல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிப்பு வளாகத்தின் எப்பகுதியிலும் அனுமதிக்கக் கூடாது. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் எவரையும் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.

    பேக்கிங் உணவுப் பொட்டலங்கள் மீது உணவு பொருளின் விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். விபரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக்கூடிய வகையிலோ, மேலும் ஸ்டிக்கர் வடிவிலோ வீபரச்சீட்டு அமைக்க கூடாது. சில்லரை வகையில் வீற்பனை செய்யப்படும் இனிப்பு/காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு /காலாவதி விபரங்கள் காட்சி படுத்த வேண்டும்.

    உணவு பொருட்களை அச்சிடப்பட்ட தாள்கள்/செய்தித் தாள்கள் வைத்து பறிமாறலோ,

    தடைசெய்யப்பட்ட நெழி (Carry Bag) பைகளிலோ விற்பனை செய்யக் கூடாது.

    உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட இடுபொருட்கள்/நுணை பொருட்களை வாங்கியதற்கான ரசிதுகள்/பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.

    உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மற்றும் முகவரி தெரியாத உணவு வணிகர்களிடம் உணவு பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது. நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும். இனிப்பு கார வகைகளில் தரம் அளவுக்கு அதிகமான நிறமிகள் பயன்பாடு, லேபிள் விபரம் இல்லாமல் இருந்தால், உணவு பாதுகாப்பு துறையின் வாட் எஸ் அப்பில்.9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×