என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாதாள சாக்கடை குழாய் அமைக்க பாலாற்றில் பாலம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் இணைப்பு அளிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய முத்து மண்டபம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில் முதல் கட்ட திட்டத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் மட்டும் சுத்திகரிக்கப்படுகிறது. 2-வது மற்றும் 3-வது கட்ட திட்டங்களுக்காக பல இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பாகாயம் பகுதியில் தொடங்கி நகரின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க வசதியாக பாலாற்றின் மறுகறையில் விருதம்பட்டு பகுதியில் சாக்கார் தோப்பு என்ற இடத்தில் 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு கழிவுநீரை பாலாற்றை கடந்து கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக ஆற்றின் கீழ் பகுதியில் கால்வாய் வெட்டி அதில் குழாய் பதிப்பதா? அல்லது சிறு பாலம் அமைத்து குழாய் பதிப்பதா? என்று ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து பாலாற்றில் பாலம் கட்டி அதன் மீது கழிவு நீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்