search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை குழாய் அமைக்க பாலாற்றில் பாலம்
    X

    பாதாள சாக்கடை குழாய் அமைக்க பாலாற்றில் பாலம்

    • 10 நாட்களில் பணிகள் தொடங்கப்படும்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் இணைப்பு அளிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய முத்து மண்டபம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் முதல் கட்ட திட்டத்தில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் மட்டும் சுத்திகரிக்கப்படுகிறது. 2-வது மற்றும் 3-வது கட்ட திட்டங்களுக்காக பல இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.

    குறிப்பாக பாகாயம் பகுதியில் தொடங்கி நகரின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள குழாய்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க வசதியாக பாலாற்றின் மறுகறையில் விருதம்பட்டு பகுதியில் சாக்கார் தோப்பு என்ற இடத்தில் 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இப்பகுதிக்கு கழிவுநீரை பாலாற்றை கடந்து கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக ஆற்றின் கீழ் பகுதியில் கால்வாய் வெட்டி அதில் குழாய் பதிப்பதா? அல்லது சிறு பாலம் அமைத்து குழாய் பதிப்பதா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதையடுத்து பாலாற்றில் பாலம் கட்டி அதன் மீது கழிவு நீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×