என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாஷிகாபுரம் கிராமத்தில் மாடுகளை திருடிய இருவர் சிறையில் அடைப்பு
- மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
- தலைமறைவான ஒருவரை போரீசார் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள பாஷிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு இவரது வீட்டில் இருந்த மூன்று மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று காலை பூபாலன் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.
இதில், சோழவரம் ஒன்றியம், விச்சூர் கிராமம், செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர்களான சூர்யா(வயது25), மணிகண்டன் என்ற மணி(வயது20) ஆகியோர் தங்களது நண்பருடன் மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்படி மூன்று மாடுகளையும் போலீசார் மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
குற்றவாளிகள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து இன்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்