search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
    X

    ரூ.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

    • திருச்சி விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
    • தஞ்சையை சேர்ந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகளால் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த பெண் பயணி ஒருவரை தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.இதில் அவர் தனது கைப்பையில் மறைத்து சங்கிலி வடிவில் ரூ.47 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அவர் தஞ்சையை சேர்ந்த ரேணுகா(வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×