search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
    X

    முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

    • திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

    திருச்சி:

    பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 115-வது ஜெயந்தியை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச் சிலைக்கு தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், மண்டல குழு தலைவர்கள் விஜயலெட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாவட்ட பொருளாளர் துரைராஜ்,

    செயற்குழு உறுப்பினர் காஜா மலை விஜய், பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், பகுதி செயலாளர்கள் மோகன் தாஸ், இளங்கோ, போட்டோ கமால், நாகராஜன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணிச் செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், கோட்டத் தலைவர் ரவி, துணைத்தலைவர் வில்ஸ் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சரவணசுந்தர், சிவா, உறையூர் எத்திராஜ், உறந்தை செல்வம், பூக்கடை பன்னீர்செல்வம், அண்ணா சிலைவிக்டர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், மகளிர் அணி ரொகையா, பெல் ராஜமாணிக்கம், மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார், மாவட்டப் பொருளாளர் புலவர் தியாகராசன், அரியமங்கலம் பகுதி செயலர் ஜெயசீலன், துரை வடிவேல், ஆடிட்டர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.வி.ஹரிஹரூண் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் குமரேசன் செயலாளர் டோமினிக்செல்வம், பொருளாளர் அழகு முருகன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மனோஜ் குமார், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×