search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
    • ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்


    திருச்சி


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தாயார் திருவடி சேவை 21-ந் தேதி நடைபெறுகிறது.


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ் தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.


    2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8ம் திருநாளான 22-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ் தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 21–ந்தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.


    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




    Next Story
    ×