என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காருக்குள் வைத்து கடத்திய 15 மூட்டை புகையிலை பறிமுதல்
- தொட்டியம் அருகே விபத்தில் சிக்கிய காருக்குள் 15 மூட்டை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
- காரை ஒட்டி வந்த டிரைவர் தப்பியோட்டம்
தொட்டியம்,
தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம்புதூர் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ராமஜெயம் (18) என்பவர் தொட்டியம் வந்துவிட்டு காமலாபுரம் புதூருக்கு செல்வதற்காக திருச்சி சேலம் சாலையில் தொட்டியம் தாசில்தார் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ராமஜெயம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தொட்டியத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர். தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை பறிமுதல் செய்த போது காரின் உள்ளே தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 15- க்கும் மேற்பட்ட மூட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்த நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்