என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- மருந்தாளுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை
    X

    தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- மருந்தாளுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை

    • தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருந்தாளுனர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிபுரிந்தனர்.
    • கோரிக்கை அட்டை அணியும் இயக்க பணியினை மாவட்டத் தலைவர் உள்பட நிர்வாகிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.

    தென்காசி:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 1,300-க்கும் மேற்பட்ட மருந்தா ளுநர் பணியிடங்களை மக்கள் நலன் கருதி உடனடி யாக நிரப்பிட வேண்டியும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதி தொகுப்பின் படி கூடுதலாக மருந்தா ளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டியும், கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டியும் தென்காசி மாவட்டத்தில் அனைத்து மருந்தாளுனர்களும் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணிபுரிந்தனர்.

    இதுதொடர்பாக மாநில பொதுச்செயலாளர் சண்முகம், அனைத்து மருந்தாளுநர்களின் நியாயமான கோரிக்கை களை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    தொடர்ந்து கோரிக்கை அட்டை அணியும் இயக்க பணியினை மாவட்டத் தலைவர் நவாஸ்கான், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் கோமதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முருகன், லெட்சுமணன், அசோக் குமார், பேச்சியப்பன், சரவணன், சுவாமிநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

    Next Story
    ×