என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி சாவு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லட்சுமி (40) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லட்சுமி தனது மகள்களுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அதேபோல் செல்வராஜூம் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் ராட்டிணமங்கலம் இ.பி.நகர் கூட்ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்