search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போளூர் குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
    X

    போளூர் குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

    • 5-ந்தேதி நடக்கிறது
    • அன்னதானம் வழங்க ஏற்பாடு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் நற்குன்று குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வரும் 5-ந்தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து தம்பதிகள் சங்கல்பமும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் அன்னதானமும் மாலை 6.00 மணி அளவில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதி உலாவும் வானவேடிக்கையுடன் நடைபெறும்.

    Next Story
    ×