என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரிசுநிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவது குறித்து ஆய்வு
    X

    அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

    தரிசுநிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவது குறித்து ஆய்வு

    • 14 கிராமங்களில் சோதனை
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் சேத்துப்பட்டு, வட்டாரத்தில் உள்ள கொளக்கரவாடி, கரைப்பூண்டி, ஓதலவாடி, தச்சம்பாடி, இடையங்குளத்தூர், உலகம்பட்டு, உட்பட 14 கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 22-23 திட்டத்தின் கீழ் உணவு தட்டுப்பாடை குறைப்பதற்கும், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்காக வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட 13 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் உள்ள தொகுப்பு தரிசு நிலங்களை கண்டறிந்து தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்.திட்டத்திற்காக தரிசு நிலங்களை ஆய்வு செய்யும் பணி வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், தலைமையில் நடந்தது.

    ஆய்வின் போது இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர்கள் வடமலை, சத்தியமூர்த்தி, சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, வேளாண்மை அலுவலர் இலக்கியா, துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜாராம், சரவணன் மற்றும் வேளாண் துறை, பொறியல் துறை, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பெரணமல்லூர், வேளாண்மை வட்டாரத்தில் உள்ள விளாநல்லூர், எறும்பூர், ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 22-23 கீழ் கிராமப்புறங்களில் உள்ள தொகுப்பு தரிசு நிளங்களை சாகுபடி நிளங்களாக மாற்றும் திட்டம் குறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், கள ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர்கள் வடமலை, சத்தியமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை துறையினர், பொறியியல் துறையினர், உடன் இருந்தனர்.

    Next Story
    ×