search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி சாவு
    X

    காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி சாவு

    • திருவிழாவை வேடிக்கை பார்த்துக் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலசப்பாக்கம்:

    கலசப்பாக்கம் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் காளை விடும் விழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கலசப்பாக்கம் அடுத்த குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    கீழ பாலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் காளை விடும் திருவிழா நடந்தது. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக கார்த்தி கீழ்பாலூர் பகுதிக்கு சென்று வருவதாக மனைவி குமாரிடம் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது கார்த்தி ஒரு ஓரமாக நின்று கொண்டு காளை விடும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தன.

    அப்போது திடீரென காளை ஒன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி மீது எதிர்பாராத விதமாக அவரை முட்டி தள்ளியது. இதில் கார்த்தி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கார்த்தி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×