search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் காளை விடும் விழா
    X

    காளை விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து வரும் காட்சி.

    ஆரணியில் காளை விடும் விழா

    • மாடுகள் முட்டி 50 பேர் காயம்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 37ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இந்த காளை விடும் திருவிழாவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்க ளிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா கேரளா மாநிலங்களிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் விழியாக துள்ளி குதித்து ஓடியது.

    இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2-ம் பரிசாக 65 ஆயிரம் ரூபாய், 3-வது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் உள்ளிட்ட 68 பரிசுகள் வழங்கப்பட்டது.

    காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க ஆரணி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×