search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்று கால்வாய் மூலம் 147 ஏரிகள் நிரம்பியது
    X

    செய்யாறு அணைக்கட்டில் இருந்து பாய்ந்து செல்லும் தண்ணீர்.

    ஆற்று கால்வாய் மூலம் 147 ஏரிகள் நிரம்பியது

    • மழைவெள்ளம் ஆற்றுபடுகையில் செல்லும் வகையில் ஷட்டர்கள் திறப்பு
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே செய்யாறு அணைக்கட்டு ஆற்று கால்வாய் பாச னம் பெறும் 147 ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் ஆற்றுப்படுகையில் வெளி யேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுப்படுகை யில் நூற்றாண்டு கண்ட அணைக்கட்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பக்க கால்வாய் அமைக்கப் பட்டு மழைக்காலங்க ளில் ஆற்றுப்படுகையில் வரும் வெள்ள நீர் இந்த கால்வாய் வழியே திரும்பி அனுப்பப்பட்டு சுமார் 147 ஏரிகள் நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள் ளது.

    இந்நிலையில், கடந்த வாரம் மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இத னால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் : ஆற்று கால்வாய் வழியே தண்ணீர் திருப்பி விடப் பட்டது. இதன் மூலம் ஆற்று கால்வாய் பாச னம் பெறும் சுமார் 147ஏரிகளும் நிரம்பி வழிந்தது.

    இதுகுறித்து பொதுப்பணிதுறையினர் கூறுகை யில், 'ஆற்றுக்கால்வாய் வழியே பயன் பெறும் ஏரி கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அணைக்கட்டில் உள்ள பக்க கால்வாய் ஷட்டர் கள் அனைத்தும் மூடப் பட்டு மழைவெள்ள நீர் ஆற்றுப் படுகையில் செல் லும் வகையில் ஷெட் டர்கள் திறக்கப்பட்டுள் ளது.

    மேலும் ஆற்றுக்கால் வாய் வழியே செல்லும் பாசன நீர் அனைத்து ஏரி களும் நிரம்பி இறுதியில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×