என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பள்ளி மாணவர்களின் உடல் நல விபரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
- இதற்கென TNSED SCHOOL APP HEALTH AND WELLBEING' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
- பிறவி மற்றும் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் சத்து உள்ளிட்ட, 23 முதல்நிலை விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
தாராபுரம்:
அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலம் குறித்த விபரங்களை வகுப்பாசிரியர்கள் சேகரித்து செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை, தேசிய சுகாதார இயக்கம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான மருத்துவ பரிசோதனைக்கு முன்கூட்டியே பரிந்துரைக்க, புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கென TNSED SCHOOL APP HEALTH AND WELLBEING' என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளின் எடை மற்றும் உயரம் துவங்கி, பிறவி மற்றும் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை, வைட்டமின் சத்து உள்ளிட்ட, 23 முதல்நிலை விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும், மாணவரின் எமிஸ் எண்ணை பதிவு செய்து உடல் நலன் குறித்த விபரங்களை அப்டேட் செய்ய வேண்டும். குறைபாடு கண்டறியப்படுவோருக்கு தேவையான உபகரணங்கள் கண் கண்ணாடி உள்ளிட்டவை பரிசோதனை செய்து தரப்படும். சிறப்பு கவனம், தொடர் நடவடிக்கை தேவைப்படும் குழந்தை யார் யார் என்பதை கண்டறியவே இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






