search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர், ஆலங்காட்டில் மலிவு விலையில் உணவகம்
    X

    கோப்புபடம். 

    திருப்பூர், ஆலங்காட்டில் மலிவு விலையில் உணவகம்

    • மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது.
    • துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் ஆலங்காட்டில் மலிவு விலையில் உயர்தர உணவு வழங்கும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் மேற்பார்வையில் தேசிய நகர்ப்புற இயக்கத்தில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களால் நடத்தப்படுகிறது. புதிதாக அமைந்துள்ள இந்த உணவகத்தை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை ஆணையாளர் சுல்தானா, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த உணவகத்தில் காலை உணவாக ஒரு வடை ரூ.5, மூன்று இட்லி ரூ.15, பொங்கல், கிச்சடி தலா ரூ.20-க்கும், மதிய உணவாக முழு சாப்பாடு ரூ.30, குஸ்கா, தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம், பீட்ரூட் சாதம், மல்லி சாதம் ஆகியவை தலா ரூ.15-க்கும், தயிர் சாதம், வெஜ்பிரியாணி ஆகியவை தலா ரூ.20-க்கும், இரவு உணவாக 3 இட்லி ரூ.15-க்கும், இரண்டு சப்பாத்தி ரூ.15-க்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×