search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதிய வழிகாட்டுதல் இல்லாததால் பூ சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம்
    X
    கோப்புபடம்

    போதிய வழிகாட்டுதல் இல்லாததால் பூ சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் தயக்கம்

    • நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
    • தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு தேவையான பூக்கள் நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனின் போது தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து புங்கமுத்தூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    சில இடங்களில் மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. எனவே பெரும்பாலானவர்கள் பூ சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    பூ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் மகசூல் பாதிக்கிறது.எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான பூக்களை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் பூக்கள் கிடைக்கும் என்றனர்.

    Next Story
    ×