என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணிகளால் ரெயில் இயக்கங்களில் மாற்றம்
- திப்ரூகரில் புறப்படும் ரெயில், கடந்த ஒரு மாதமாக நீண்ட நேரம் தாமதமாக வருகிறது.
- தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது.
திருப்பூர்:
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.திப்ரூகரில் புறப்படும் ெரயில், கடந்த ஒரு மாதமாக வழக்கமான நேரத்தைக் காட்டிலும், நீண்ட நேரம் தாமதமாக ஈரோடு, திருப்பூர், கோவை நிலையங்களுக்கு வருகிறது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அசாம், நாகலாந்து, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகிய 8 மாநிலங்களை கடந்து 4,189 கி.மீ., இந்த ெரயில் பயணிக்கிறது. மொத்தம் 59 நிலையங்களில் நின்று செல்கிறது. நீண்ட தூரத்துக்கு இயக்கப்படும் ெரயில்களில் விவேக் எக்ஸ்பிரஸ் ெரயில் முதன்மையாகத் திகழ்கிறது. புறப்படும்போது தாமதம் ஏற்படுவதில்லை. ஏதேனும் ஒரு கோட்டத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது. வரும் நாட்களில் இயக்கம் சீரடையும் என்றனர்.
மதுக்கரை, கஞ்சிக்கோடு, கண்ணுார் பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடப்பதால் ெ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
பாலக்காடு - கோவை மெமு ரெயில் ஏதேனும் ஒரு பகுதியில் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்கோவை - மங்களூரு ெரயிலும் ஏதேனும் ஒரு பகுதிகளில், 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். மேலும் 19, 20 ஆகிய தேதிகளில் இந்த ெரயில் கஞ்சிகோட்டில், 15 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்படும். கோவை - சொரனூர் ெரயில் 19, 20 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு பகுதியில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 14 மற்றும், 15 ந் தேதி ஆகிய 3 நாட்கள், ஆலப்புழா - தன்பாத் ெரயில் வழி மாற்றப்படுகிறது.
வருகிற 16-ந் தேதி வரை விஜயவாடா ெரயில்வே கோட்டத்தில், தண்டவாள மேம்பாடு மற்றும் பாலம் சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ெரயில்களில் இயக்கம், வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
அவ்வகையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் (எண்:13351) ஆந்திர மாநிலம் நிட்டவொலு ஜங்ஷன் - விஜயவாடா இடையே வழித்தடம் மாற்றப்படுகிறது. இதனால், டேட்பெல்லிகுடம், ஏழுரூ நிலையங்களுக்கு செல்லாது. மாற்று வழியில் இயங்கும்.வழித்தடம் மாற்றம் காரணமாக அடுத்தடுத்த நிலையங்களுக்கும் ெ ரயில் வந்து சேர தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்