என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.
ஆம்பூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
- 2 பேர் கீழே குதித்து ஓடியதால் உயிர் தப்பினர்.
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்பூர் ஸ்டார் பிரியாணி ஓட்டல் அருகே நள்ளிரவு 2 மணி அளவில் வேலூரில் இருந்து கார் ஒன்று ஆம்பூர் நோக்கி சென்றது.
அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் இருந்த 2 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர். இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story