என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி மோதி பைனான்சியர் பலி
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
கரூர் மாவட்டம் கா.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 36). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்துக்கு வந்த இவர் ஆம்பூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தச்சுத்தொழிலாளியான நேருவும் (50) மற்றொரு பைக்கில் ஆம்பூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தேவலாபுரம் பகுதியில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, துத்திப்பட்டு பஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென இவர்களது மோட் டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில் மணிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேரு, படுகாயத்துடன் துடிதுடித்தார்.
சம்பவ இடத் துக்கு போலீசார் விரைந்து வந்து நேருவை மீட்டு சிகிச்சைக் காக அனுப்பிவைத்தனர். பின்னர் மணிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசனை (45) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்