search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் புதிய வகுப்பறை
    X

    அரசு பள்ளியில் புதிய வகுப்பறை

    • ரூ.30 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலருமான கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், துணைத் தலைவர் பாத்திமா சாது உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×