search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே ஒரே நாளில் 3 கோவில்களில் கொள்ளை

    • கோவில்களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • ஒரே நாளில் 3 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நெமிலி அகரம் கிராமத்தில் உள்ள செல்லத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதேபோல் அருகே உள்ள கீழ்விளாகம் கிராமத்தில் பாப்பாத்தி அம்மன்கோவில், கடும்பாடிஅம்மன் கோவில் பூட்டையும் உடைத்து நகை-உண்டியல் பணத்தை சுருட்டி சென்று விட்டனர். மூன்று கோவில்களிலும் மொத்தம் 24 சவரன் தங்க நகை, உண்டியல் பணம் ரூ.5 லட்சம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே நாளில் 3 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×