என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைப் பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு
- கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மறு சீரமைப்பில் போடப்பட்ட சாலை பணிகளை உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார்.
புதிதாக போடப்பட்ட சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உதவி கலெக்டர் 3 இடங்களில் சுத்தி மற்றும் கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தலைமை செயற்பொறியாளர் ஆனந்தி, உதவி செயற் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story






