என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி கண்ணாடி கல்வீசி உடைப்பு- வாலிபரிடம் விசாரணை
- தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கோபத்தில் இருந்த விஜி திடீரென ஆஸ்பத்திரி மீது கல்வீசி தாக்கினார்.
- திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:
ஆவடி அடுத்த திருநின்றவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி. இவருடைய தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக விஜி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடன் விஜி இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் அரசுஆஸ்பத்திரியில் தனது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விஜி அடிக்கடி அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்கு வாதம் செய்தார். அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் சமாதானப்படுத்தி உரிய சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காததால் கோபத்தில் இருந்த விஜி திடீரென ஆஸ்பத்திரி மீது கல்வீசி தாக்கினார். இதில் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.இதனால் அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விஜியை மடக்கி பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்