search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுக்கடைகள் நாளை மூடல்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
    X

    மதுக்கடைகள் நாளை மூடல்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு

    • மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகள் மூட வேண்டும்.
    • தனியார் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுபான சில்லரை வணிகம் விதிகள் படி மகாவீர் ஜெயந்தி தினத்தன்று அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூட வேண்டும் என நெறிமுறைகள் உள்ளது.

    அதன்படி நாளை மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் கிளப்புகள், தனியார் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×