என் மலர்
உள்ளூர் செய்திகள்

திரு.வி.க. நகரில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
- சென்னை திரு..வி.க நகர்,ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
சென்னை, திரு..வி.க நகர்,ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது47). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சந்திரசேகர் வீட்டின் மாடியில் இருந்து திடீரென குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story