என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
உத்தமபாளையம் அருகே தொழிலதிபர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
- பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- குற்றவாளியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம்(68). கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்தார். கடந்த மார்ச் 14-ந்தேதி அவரது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அதிசயத்தை தாக்கி காரில் கடத்திச்சென்றனர். போலீசார் அவரை தேடி வந்தநிலையில் தொழிலதிபர் அதிசயத்தை தாக்கி ஓடும் காரில் இருந்து தூக்கிவீசிவிட்டு அந்த கும்பல் தப்பிஓடியது.
பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி சாக்கலிபட்டியை சேர்ந்த பிரபு(31), திருப்பரங் குன்றத்தை சேர்ந்த கவுசிக்(22), திருநகரை சேர்ந்த அஜித்(23) உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருப்பதி(45) என்பவரை ராயப்பன்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் மதுரை ஜே.எம்.கோர்ட்டில் திருப்பதி சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய் துள்ளனர். விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்