என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுவை இழுத்துச் செல்லும் புலிகள்.
குமுளி அருேக பசுவை கொன்று இழுத்து சென்ற புலிகள்
- அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 3 புலிகள் பசுவை கொன்று இழுத்து சென்றது பதிவாகி இருந்தது.
- புலிகள் நடமாட்டத்தால் ஏல தோட்டத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைப்பகுதியில் தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இதனையொட்டி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் மிளகு, தேயிலை பயிரிட்டுள்ளனர்.
இந்த தோட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று திரும்புகின்றனர். குமுளி அருகே வண்டிபெரியாறு பகுதியில் அலைக்சாண்டர் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டம் உள்ளது. இங்கு மாட்டு கொட்டகை அமைத்து பசுக்களை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு பசு வன விலங்குகள் தாக்கி இறந்து கிடந்தது. மற்றொரு பசு காயம் அடைந்திருந்தது. எனவே பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 3 புலிகள் பசுவை கொன்று இழுத்து சென்றது பதிவாகி இருந்தது.
மேலும் காமிராவில் பதிவான புலிகள் தாய் மற்றும் குட்டிகளாக இருக்கலாம். இந்த புலிகளை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
புலிகள் நடமாட்டத்தால் ஏல தோட்டத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்






