என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டை பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த வாலிபர் தேடும் பணி தீவிரம்
- கடந்த ஒரு வார காலமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.
- போலீஸ் விசாரணையில் சர்க்கரை நோய்க்கு குணா சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை சிந்தாரிப் பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் என்ற குணா. இவர் அதே பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிந்தாரிப்பேட்டை கூவம் கரையோரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் கீழே குதித்தார். அவர் கூவத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை போலீசாரும் எழும்பூர் தீயணைப்பு துறையினரும் ரப்பர் படகுகள் மூலம் குணாவை தேடி வருகின்றனர். மழை குறுக்கிட்டதாலும், இருள் சூழ்ந்ததாலும் தேடும் பணியில் நேற்று இரவு தொய்வு ஏற்பட்டது. இன்று காலையிலும் அவரை தேடும் பணி நடைபெற்றது.
போலீஸ் விசாரணையில் சர்க்கரை நோய்க்கு குணா சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வரும் அவர் நேற்று காலையில் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியது தெரிய வந்துள்ளது. அதன் பிறகே குணா கூவத்தில் குதித்தது தெரிய வந்துள்ளது. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்