என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சமூக ஆர்வலர் கொலையில் கொலையாளிகளுக்கு தகவல் பரிமாறிய போலீஸ்காரர் 'சஸ்பெண்டு'
- கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்(37). சமூக ஆர்வலர். இவர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு பெற்று இருந்தார்.
இந்த மோதலில் கடந்த மாதம் 29-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் பட்டப்பகலில் சர்புதீன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த, பேரூராட்சி கவுன்சிலர் தவுலத்பீ, அவரது மகன் பாரூக் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக போலீஸ் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தகவல்களை பரிமாறியதாக திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய நீதிமன்ற பொறுப்பு காவலர் பிரசாந்த்(32) என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரதீப் பிறப்பித்து உள்ளார்.
இது தொடர்பாக மேலும் ஒரு போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
கொலையாளிகளுக்கு தகவலை பரிமாறியதாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்