என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்பத்திரியில் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண் ரெயில் மோதி பலி
    X

    ஆஸ்பத்திரியில் குழந்தையை தவிக்க விட்டு சென்ற பெண் ரெயில் மோதி பலி

    • ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விசாரணையில் இறந்த பெண் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருநின்றவூர் - வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானார்.

    இறந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

    திருவள்ளூர் ரெயில்வே போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்த பெண் திருத்தணி அடுத்த செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 25) என தெரிய வந்தது. கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்று ஆண் குழந்தை பெற்றுள்ளார்.

    சற்று மனநிலை பாதிக்கப்பட்ட சங்கீதா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் குழந்தையை விட்டு விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் ரெயிலில் ஏறி சென்ற அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கி பலியானார் என தெரிய வந்தது.

    Next Story
    ×